நேரம்

Thursday, June 12, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 27

நான் யார்
இது ஒன்றும் என்னைப் பற்றிய சுய மதிப்பீடு இல்லை. எனவே பயப்படாமல் படிக்கவும்.

பித்தன் யார் என்ற கேள்வி இன்னமும் பலருடைய மனதைக் குடைந்து கொண்டிருப்பது நண்பர்கள் பலரோடு பேசிக் கொண்டிருந்ததிலிருந்து தெரிந்தது.

அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்
"நாட்டுக் கொரு சேதி சொல்ல நாகரீகக் கோமாளி வந்தேனுங்க ...."

அதில் முத்தாய்ப்பாக ஒரு சில வரிகள்

"கரைகள் தூங்க விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை,
இலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை,
ஓடி ஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை, விடுவதில்லை, விடுவதில்லை, விடுவதில்லை....."

இதைப் போல நான் விலகி போக எவ்வளவு முயன்றாலும் நான் யார் என்று தெரிந்து கொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள். நான் யார் என்பதை நானே தேடி கண்டு கொள்ள முடியாத போது, என்னை யார் என்று பகுத்து, ஒரு கூண்டுக்குள் அடைக்க பலரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அது ஏன் என்று விளங்கவில்லை.

அதோடு சேர்த்து என் நண்பர்கள் பலரையும் அவர்கள்தான் 'பித்தன்' என்ற பெயரில் எழுதுவதாக நினைத்துக் கொண்டு சற்று கோபத்தோடு பார்ப்பதாகவும் தகவல்.

என் நண்பன் ஒரு ஞாயிறு மாலை (6/1) அவனுடைய நண்பர் வீட்டுக்கு போயிருக்கான், அப்போ அங்க இன்னொரு friend-அ பார்த்திருக்கான், அவர் என் freiend-ப் பாத்து "நீ தானே அந்த பித்தன், எனக்கு எல்லாம் தெரியும்ன்னு அவனை சதாய்ச்சுருக்கார். அதுக்கு என் friend என்ன சொல்றதுன்னு தெரியாமல், அசட்டுத்தனமாக சிரிச்சுட்டு, சரி இந்த விளையாட்டு எவ்வளவு தூரம் போறதுன்னு பார்த்திடலாம்ன்னு சகட்டு மேனிக்கு ரீல் சுத்திட்டு வீட்டுக்குப் போறதுக்குள்ள எனக்கு கால் பண்ணி;
"அய்யா, ஒரு வழியா உம்மை காப்பாத்திட்டேன், அநேகமாக இனிமே உங்கள யாரும் திட்ட மாட்டாங்க, தப்பிசீங்க"ன்னான்.

"ஏன், என்ன ஆச்சு, எதை வெச்சு அப்படி சொல்ற, யார் கிட்டயிருந்து என்னைக் காப்பத்தின, அதைச் சொல்லு"

"யார் கேட்டாங்க, எங்க வெச்சு கேட்டாங்கன்னு சொல்ல மாட்டேன், ஆனா நிறைய பேர் நாந்தான் பித்தன்னு கண்டு பிடிச்சுட்டாங்களாம், இன்னிக்கு ஒருத்தர் என் கிட்ட சொல்லி என் ரெஸ்பான்ஸ் என்னன்னு குறு குறுன்னு பார்த்தார், எனக்கும் அதைக் கேட்டதும் கொஞ்சம் காமெடியா இருந்தது, சரி இந்த சாக்குல எனக்கும் கொஞ்சம் பாபுலாரிட்டி கிடைக்கட்டுமேன்னு நான் ஒன்னும் பெரிசா ஆர்க்யூ பண்ணாம அப்படியா, அதை ஏன் இப்படி அப்பட்டமா கேக்கரீங்கன்னு கேட்டவர் கிட்ட சொல்லிட்டு அந்த மேட்டரை அப்படியே கொஞ்சம் ஊதி பெரிசாக்கி விட்டுட்டேன். கேள்வி கேட்டவர் எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நிறைய பேர்கிட்ட சொல்லிடுவார், என்ன, இனிமே நான் எழுதர கதையை யாரும் படிக்க மாட்டாங்க, என்னை வெளியில வாசல்ல பார்த்தா, இதோ போறான் பித்தன்னு எல்லோர் எதிரிலும் சொல்லப் போராங்க, கோபமா முறைக்கப் போறாங்க, ஆனா, நீங்கதான் பித்தன்னு உங்களை யாரும் திட்ட மாட்டாங்க, இது எப்படி இருக்கு"ன்னான்.

"ஏன் இப்படி பண்ணினே, பேசாம, பித்தன் யாருன்னு சொல்லிடரதுதானே"ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன், "அட சும்மாயிருங்க, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கதான் பித்தன்ங்கரத கண்டு பிடிச்சேன், அதை சட்டுன்னு அடுத்தவங்களுக்கு ஏன் சொல்லனும், அவங்களே கண்டு பிடிக்கட்டும். இப்போ இந்த விஷயம் பரவினா பலர் என்னை பாக்கர இடத்திலேயே அடிப்பாங்கன்னு நினைக்கிறேன், அப்படி அடிச்சா, வலி தாங்காம ஒரு வேளை நான் சொல்லிடுவேன் அப்ப பாத்துக்கலாம், அது வரைக்கும், உங்க ஐடெண்டிடிய மறைச்சே வையுங்க"ன்னான்.

"சரி நான் இதையே ஒரு போஸ்டிங்கா ப்ளாக்ல போட்டா, உன்னை கேள்வி கேட்டவர் இதைப் படிச்சுட்டு உன்னைத் தப்பா நினைச்சுட்டா"ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன், "மொதல்ல உங்க ப்ளாகை ரிச்மண்டில் யார் படிக்கராங்க, நான், நீங்க, இன்னும் ஒன்னு ரெண்டு பேர், அதனால ரொம்ப Film காட்டாதீங்க, இருந்தாலும் உங்களப் போய் காப்பாத்த நினைச்சேனே என் புத்திய எதால அடிக்கரது, என்னமோ பண்ணித் தொலைங்க"ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான்.

அதுக்குப் பிறகு, இந்த பதிவை எழுதலாமா, வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன், அப்புறம் எழுதினா என்ன ஆகும்னு யோசிச்சேன், என்ன என் friend கொஞ்சம் கோபப் படுவான், அவனை எப்படியாவது சமாளிச்சிடலாம்னு இதை எழுதிடறேன். அதோட என் மேல இருக்கர கோபத்தில அவனையும் அவனைப் போல கொஞ்ச நஞ்சம் எழுதர மற்ற பதிவர்களை எல்லாம் விரோதமா பாக்கரது நல்லா இருக்காதுங்கரதுனாலயும் இந்த பதிவை எழுதிட்டேன்.

நான் என் முதல் பதிவுல சொன்னது போல, என்னைக் கண்டு பிடிக்க முயல்வது ஒரு கால விரயம். என் கருத்துக்களை வைத்து பலரையும் 'பித்தன்' இந்த ஆளா, ஒரு வேளை அந்த ஆளோ? இல்லவே இல்லை இது அவந்தான், அட போங்கப்பா பித்தன் இவந்தான், என்று போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம், ஒரு வேண்டுகோள் என் மீதுள்ள கோபத்தில் பல நல்ல பதிவர்களை இழந்து விடாதீர்கள்.


அமெரிக்க அதிபர் தேர்தல்
ஒரு வழியாக டெமாக்ரட் பார்ட்டியின் ஒபாமாதான் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடப் போகும் வேட்பாளர் என்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இப்போது அவரும் ரிபப்ளிக்கன் பார்ட்டியின் மெக்கெய்னும் இனி களத்தில் நேரடியாக மோதப் போகிறார்கள். அலுவலகத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் வாயைக் கிண்டியதில் கிடைத்த சில தகவல்கள்:
போட்டி சற்றுக் கடுமையாக இருக்கும்.
இருவரில் இவர் ஒசத்தி இவர் மட்டம் என்று சொல்ல முடியாது, ஏன் என்று அவர்கள் சொன்னதை நானும் சொல்லப் போவதில்லை.
இருவரில் ஒபாமா நல்ல பேச்சாளி.
இருவரில் மெக்கெய்னுக்கு அரசியல் அனுபவம் அதிகம்
இருவரில் ஒபாமா இளையவர், அதுவே அவருடைய பலம் மற்றும் பலவீனம்.
இருவரும் வாய்ப் பந்தல் போடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.
யார் வந்தாலும் போர் நிறுத்தம் (எங்கிருந்து என்று சொல்ல வேண்டியதில்லை) உடனடியாக இருக்காது
யார் வந்தாலும் பெட்ரோல் விலை குறையப் போவதில்லை
யார் வந்தாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையப் போவதில்லை.
யார் வந்தாலும் தனி மனித சம்பாத்தியம் உடனடியாக உயரப் போவதில்லை.

அது சரி இதெல்லாம் ஓட்டுரிமை இருந்து அந்தக் கடமையை செய்யரவங்களுக்கு, மற்றவர்கள்... வழக்கம் போல படிச்சுட்டு போய்கிட்டே இருக்கலாம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....