நேரம்

Sunday, March 11, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 7

சமகால அபத்தங்கள் என்று சிலவற்றை சுஜாதாவின் 'நிதர்சனம்' சிறுகதையில் முன்பு எப்பவோ படித்தது சமீபத்தில் அவருடைய ஒரு கருத்தை விகடனில் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் படித்ததும் நினைவுக்கு வந்தது.

முதலில் சன் டிவியில் சமீபத்தில் பார்த்த சில அபத்த விளம்பரங்கள், அதன் பிறகு சுஜாதாவின் எந்த கருத்து அபத்தம் என்பதைப் பார்ப்போம்:

1. ஒரு பெண் சிரித்தபடி கூட்டத்தோடு படிகளில் இறங்கி வருகிறாள், கீழே அவளுடைய நண்பர்களைப் பார்த்து, வலக்கையைத் தூக்கி பக்கவாட்டில் தமிழி 'ப' போல (அ) ஆங்கில 'C' போல காட்டி என்ன என்று கேட்கிறாள், அவர்கள் தெரியாமல் விழிக்க, மறுபடி வலக்கையைத் தூக்கி அதேபோல செய்ய, அவர்களும் ஏதோ புரிந்தது போல அவளைப் போலவே செய்ய, அனைவரும் சிரிக்கின்றனர். பிறகு பின்னனியில் 'சொல்லாமல் சொல்லுமே, பேசாமல் பேசுமே' என்று பாடல் ஒலிக்கிறது இது அமுல் காஃபிக்கான விளம்பரம். என்ன சொல்ல வருகிறார்கள், கையை அப்படி காட்டினால் அது அந்த காஃபி வாங்க வேண்டும் என்றா, அது இருக்கிறதா என்று கேட்கிறார்களா, அது எங்கே என்று கேட்கிறார்களா, அதுவும் படி இறங்கி வரும்போது எப்படி ஞாபகம் வருகிறது? இது முதல் அபத்தம்.

2. ஒரு விளம்பரம் - தமிழில் நம்பர் 1 நாளிதழ் - தினகரன் என்று . இதை யார், எதை வைத்து தீர்மானிகிறார்கள்? கடைசியில் அந்த விளம்பரத்தில் பேப்பர் படிக்கும் ஒருவர் 'நான் படிக்கரது நம்பர் 1 நாளிதழ், அப்ப நீங்க?' என்ற கேள்வியுடன் முடிக்கிறார். இது எப்படி இருக்குன்னா, எங்க தாத்தா மாடு மேய்ச்சாரு, எங்க அப்பா ஆடு மேய்ச்சாரு, மேய்கரது எங்க பரம்பரைத் தொழிலு அதனால நானும் ' அந்தப் பெருமைக்கு இப்ப பன்னி மேய்க்கிறேன்னு சொல்ற மாதிரி இருக்கு. படிக்கர ந்யூஸ் சரியா இருக்கான்னு பாருங்கப்பா, பேப்பர் நம்பர் ஒன்னா, ரெண்டான்னு பார்த்துகிட்டு இருந்தா விடிஞ்சுடும். இது ரெண்டாவது அபத்தம்

3. மேலே சொன்ன நாளிதழ் மாதிரி, 'இந்தியாவின் நம்பர் 1 டீலர் வசந்த் அண்டு கோ' என்று விளம்பரம் செய்கிறார்கள், எந்தப் பொருளுக்கு என்று சொல்வதில்லை, ஒருவேளை சொன்னால் ப்ரச்சனை வரும் என்று சொல்ல பயமோ? இது மூன்றாவது அபத்தம்.

4. பாம்பே ஞானம் அவர்கள் வெயிலில் மிளகாய் காய வைத்து கொண்டு இருக்கிறார். தேவயானி அவரிடம் அதைப் பற்றிக் கேட்க அவர், இப்படி செய்து, நல்லா அரைச்சாதான் நல்ல மிளகாய்ப் பொடி கிடைக்கும் என்று சொல்ல, அதற்கு தேவயானி, 'ஆச்சி மிளகாய்த் தூள்' அழகா பாக்கெட்ல கிடைக்குதேன்னு சொல்லி, அவரை ஆச்சர்யப் பட வைக்கிறார். வீட்டில மிளகாய் காய வைத்து அவர்களே அரைத்து வைத்தால், 1 கிலோ மிளகாய்த்தூள் 80- 100 ரூபாய் ஆகும், அதுவே பாக்கெட் தூள் வாங்கினா 50 கிராம் 25ரூபாய் ஆகும். நாடு விட்டு நாடு வந்திருக்கும் நம்மை போன்றவர்களுக்கு வேற வழியில்லாம தூள் பாக்கெட் வாங்கரோம். அங்க இருக்கரவங்களுக்கு இது தெரியாம இருக்குமா! இது நாலாவது அபத்தம்.

5. இனி சுஜாதாவின் எழுத்தில் கண்ட அபத்தம். இது அவர் எழுதிய படியே
"காஷ்மீர் பற்றி நான் சில வாரங்களுக்கு முன் எழுதியதற்குக் கண்டனம் தெரிவித்து, சில கடிதங்கள் எனக்கு வந்தன. நான் ‘political will’ தேவை
என்று சொன்னது சிலருக்குப் புரியவில்லை. ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்டில் ‘stop loss’ என்று ஒரு நிலைமை வரும். ஏற்கெனவே தாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். அந்த மாதிரி சமயங்களில் அந்தக் காரியத்தைக் கைவிடுவதுதான் உத்தமம் என்று தீர்மானிக்க வேண்டி வரும். காஷ்மீரில் அந்த நிலைமைக்குத்தான் வந்திருக்கிறோம். தீர்வு ஏதும் தென்படவில்லை. இதில் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதுகூடத் தெளிவாக இல்லை. தமிழ்நாட்டிலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் செல்லும் சி.ஆர்.பி.எஃப். ஜவான்களான கந்தசாமியும், வடிவேலுவும், கரம்சந்தும், பரஸ்நாத்தும், ஹீராவும், தினம் ஸ்ரீநகர் தெருக்களில் ரத்தம் சிந்துகிறார்கள். காஷ்மீரில் ராணுவத்தையும் போலீஸையும் வைத்து தேசபக்தியைப் புகட்ட முடியாது என்பது நம் தலைவர்களுக்குத் தெரியவில்லை. காஷ்மீரில் ஒரு நாளைக்கு ராணுவத்துக்கும் போலீஸுக்கும் ஐந்து கோடி ரூபாய் செலவாகிறது. காஷ்மீரிகள் இருபது பேருக்கு ஒரு ஜவான் என்ற ரீதியில் மூன்று லட்சம் வீரர்கள் அங்கே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்கா... வியட்நாமிலும் இராக்கிலும், ரஷ்யா... ஆப்கானிஸ்தானிலும் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு நிலைமைதான் இது என்பதை நம்ப மறுக்கிறோம். ‘A debilitating war costing millions of dollars and thousands of innocent lives with no coherent policy to control it, and little chance of victory’ என மில்லியன்கள் கணக்கில் டாலர் செலவுசெய்து, ஆயிரக்கணக்கில் அப்பாவி உயிர்களை இழந்து, கோவையான அரசியல் அணுகுமுறை இல்லாமல் வெற்றி வாய்ப்பு இல்லாது பலவீனப்படுத்தும் போர் இது என்று மூரும், ஆண்டரசனும் 1993-ல் சொன்னது இன்றும் மாறவில்லை. இது ‘stop loss’ நிலையா... நீங்களே தீர்மானியுங்கள்! "

இந்த பேச்சை ஒரு அரசியல்வாதி சொல்லியிருந்தால் அதை பற்றி அதிகம் சொல்ல ஏதுமில்லை. நன்கு படித்த ஒரு எழுத்தாளர் அடிக்கடி இப்படி அபத்தமாக பேசி வருவது வியப்பாக இருக்கிறது.

தாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்

இது ஒரு கம்பெனிக்கு வேண்டுமானால் ஒத்து வரக்கூடும். இது ஒரு மாநிலம் சார்ந்த விஷயம். மாநிலம் மட்டும் இல்லாமல் இரு நாடுகள் சார்ந்த விஷயம். இதில் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்க முடியாது. தாமதமாகி விட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை முடிக்காமல் விட்டால் அதன் விளைவுகள் இன்னமும் பயங்கரமாக இருக்கும். திருவள்ளுவர் சொன்னது போல் :

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

எனவே தொடங்கியது முடிக்கப் படவேண்டியதுதான். கால தாமததுக்கு முதல் காரணம், முக்கிய காரணம் நமது அரசியல்வாதிகள், அவர்களை அடையாளம் காட்டாமல் இப்படி அபத்தமாக எழுதியிருக்கிறார்.

-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

0 comments: