நேரம்

Saturday, March 31, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 9

அண்டப் புளுகர், ஆகாசப் புளுகர் வெட்டிப்பயல்

யாரை இப்படி சொல்றேன்னு நீங்கல்லாம் கொஞ்சம் யோசிப்பீங்க. யோசிக்கலேன்னா இப்படி நான் சொன்னதுக்காகவாவது யோசிங்கப்பா.

சமீபத்தில் வெட்டிப்பயல் என்கிற ஒரு ப்ளாக்கரை பற்றித் தெரிஞ்சுகிட்டேன். அவருடைய எல்லாப் பதிவுகளும் நல்லா இருக்கு. அவரோட ரசிகர் கும்பலை பார்த்தா மலைப்பா இருந்துச்சு, அவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் வருது. நான் எழுதினா, 'ஆண்பாவம்' படத்தில ஜனகராஜ், ஒட்டல்ல ஈ ஓட்ர மாதிரி ஒரு பின்னூட்டம் கூட வரதே இல்லையேன்னு யோசிச்சேன். அதை தெரிஞ்சுகிட்டா நாம்பளும் பெரியாளாயிடலாமேன்னு, மொதல்ல அவருக்கு ஒரு 10 கிலோ ஐஸ் வெச்சு ஒரு மின்னஞ்சல் (அதாங்க e-mail) அனுப்பினேன். ரெண்டு நாள் கழிச்சு அவர்கிட்ட இருந்து 'நீங்க விரிச்ச வலையில நான் மாட்டிகிட்டேன்'-ங்கர மாதிரி, 'நான் கொஞ்சம் பிஸி, நாளைக்கு உங்களை கூப்பிடரேன்'-ன்னு மின்னஞ்சல் அனுப்பினாரு. சரிதான் மீனு புழுவை பிடிச்சிட்டுதுன்னு இருந்தேன். இதுக்கு நடுவுல அவரோட அடுத்த பதிவு 'கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்' வந்துச்சு. உடனே இன்னும் ஒரு 10 கிலோ ஐஸ் சேத்து கனமா இன்னொரு மின்னஞ்சல் அனுப்பி அவரை கூப்பிட வெச்சு கொக்கியையே கடிக்க வெச்சேன்.

அவர் என்னைக் கூப்பிட்டு, "இவன் ரொம்ப படுத்தரான்" ஒரு 10 நிமிஷம் பேசிட்டு வெச்சிடலாம்னு இருந்திருப்பார், நாங்க ராங்க் கால் வந்தாலே அரை மணி அறுக்கரவங்கன்னு அவருக்கு தெரியலை. நான் 55 நிமிஷம் அறுத்ததும், தாங்க முடியாம, "ஆஸ்திரேலியா கிரிக்கேட் டீம் வேர்ல்ட் கப் வின் பண்ண என்ன பண்ணனும்னு என் கிட்ட கேக்கராங்க அதுக்கு ஒரு மீட்டிங் இன்னும் 5 நிமிஷத்தில இருக்கு"-ன்னு சொல்லிட்டு நழுவிட்டார்.

அவர்கிட்ட பேசின 55 நிமிஷ சிறு உரையாடலை முழுசா தந்தாதான் நான் ஏன் அவரை அண்டப் புளுகர்-ன்னு சொல்றேன்ங்கரது புரியும். ஆனா அதை நான் கொடுத்தா, சாதாரணமாவே என் பதிவுகளை, நுனிப்புல் மேயரமாதிரி படிகரவங்க கூட படிக்க மாட்டீங்க, அதனால அந்த உரையாடலின் ஒரு சிறு தொகுப்பு.

அவருடைய முதல் பொய்:
"நான் எழுத ஆரம்பிச்சு ஒரு 1 அல்லது 1 1/2 வருஷங்கள்தான் இருக்கும், எனக்கு கதையெல்லாம் எழுதத் தெரியாது "

அவருடைய கொல்ட்டி கதையைப் படிச்சுட்டு, இது இவரோட முதல் கதை, இதுக்கு முன்னால் இவருக்கு கதை எழுதும் பழக்கமே இல்லைன்னு சொன்னால் எப்படி நம்பரது. வடிவேலு பாணியில சொல்லனும்னா "நாங்க பார்த்தா ஜாதாரனமாத்தான் இருப்ப்ப்போம், ஆனா வெவ்வ்வரமான பார்ட்டி, ஏதோ நம்ம பயபுள்ள எழுதுதேன்னு படிக்க வந்தா, என்னா? சின்ன புள்ள தனமாயிருக்கு!"

அவருடைய ரெண்டாவது பொய்:
"கவுண்டரின் டெவில் ஷோ ஒரு 10-15 நிமிஷம் யோசிச்சுட்டு எழுதிடுவேன், நான் எழுதரது அந்த character பேசரமாதிரியே இருக்கா?"

"இவ்வளவு நேரம் நல்லாத்தானே போயிகிட்டிருக்கு, என்னத்துக்கு நடுப்பர இப்டி ஒரு பிட்ட போடர, நாங்கல்லாம், இப்டி படக்கு படக்குன்னு எழுதரது இல்லைங்கரத எதுக்கு வெளிய சொல்லி அசிங்க படுத்திக்கிட்டு, போய் சோலியப் பாப்பியா"

அவருடைய மூனாவது பொய்:
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அதனால நிறைய எழுதித் தள்ள முடியுது"

"என்ன சொல்ல வர்ரிங்க, நாங்களும் பேச்சிலரா இருந்தா நல்லா எழுதிடுவோமா? நாங்க ஏன் சரியா எழுதரது இல்லைன்னு கேட்டமா, இல்லைல, பொரவு எதுக்குப்பா இப்டி போட்டு வாங்கரே".
உங்க எல்லாருக்கும் கடைசியா ஒருதடவை சொல்றேன், வெட்டிப்பயல் தனக்கு ஒன்னும் தெரியாதுன்னு பொய் சொல்லி எல்லாரையும் ஏமாத்தரார். என்னடா இவன் இவ்வளவு சொல்றானேன்னு ஒரே ஒரு தடவை அவரோட பதிவ போய் பாப்போம்ன்னு போயிடாதீங்க, அப்பரம், தெனமும் காலைல சுப்ரபாதம் படிக்கர மாதிரி அவரோட பதிவு வந்திருக்கான்னு மனசு அலைபாய அராம்பிச்சிடும். பிறகு என்னைத் திட்டாதீங்க.

உலகக் கோப்பை - கிரிக்கெட்
இந்திய அணி நம்ப எல்லாருக்கும் ஒரு பெரிய ஆப்பு வெச்சிட்டு, ஊருக்கு போய் செட்டில் ஆயிட்டாங்க. இன்னும் ஒரு 2-3 மாசம் அவங்களை திட்டிகிட்டு இருப்போம், அப்பரம், எல்லாத்தையும் மறந்துட்டு வழக்கம் போல அவங்களுக்காக, பால் காவடி, பன்னீர் காவடி எடுத்துகிட்டு இருப்போம். வர வர இந்திய கிரிக்கெட் அணியும், நம்ம அரசியல் வாதிங்க மாதிரி ஆயிட்டாங்க. நம்ப மறதி அவங்களுக்கு ஒரு பெரிய பலம். நாம திருந்தர வழியாவும் இல்லை, அவங்க மாற்றதாவும் இல்லை. இல்லைன்னா ரூபாய்க்கு 3 படி அரிசி போடறேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க அது என்ன ஆச்சுன்னு இன்னமும் நம்பளும் கேக்கல, அவங்களும் கொடுக்கல. நிலமில்லாத ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம்ன்னு சொன்னாங்க, அது இப்ப கையளவு நிலமாவது தருவோம்ங்கரதுல வந்து நிக்குது. அவங்க எல்லாம் விவரமாத்தான் இருக்காங்க நமக்குதான் அது புரியல. சமீபத்தில பார்த்த புரட்சித் தலைவரோட எங்க வீட்டுப் பிள்ளைல ஒரு பாட்டு பாடரார். 'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், இங்கு ஏழைகல் வேதனைப் படமாட்டார்.....' அவர் என்ன சொல்ல வரார், மொதல்ல நான் ஆனையிட மாட்டேன், அப்படியும் என்னை மீறி ஆனையிட்டால், அது நடக்காது, அதையும் மீறி அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார். இது நமக்குத்தான் புரியல.
உலககோப்பை ஆரம்பிக்கரதுக்கு முன்னாடியே ஒருத்தர் இன்வெஸ்ட் மெண்ட் பத்தி சொல்றார், ஒருத்தர் க்ரெடிட் கார்ட் யூஸ் பண்ணுங்க உங்களுக்கு பென்ஸ் கார் கிடைக்கலாம்-ன்னு சொல்லிட்டு, தலைக்கு பூசர க்ரீம் பத்தி விளம்பரம் பண்ணினார், ஒருத்தர் அதே க்ரீமோட இன்னோரு விளம்பரத்துல வந்துட்டு, ஒரு சோப் விக்கரார். ஒரு பெரும் பேர் ஆள், எனக்கு ஃபோன் பண்ணுங்க நான் உங்களுக்கு ஸ்கோர் சொல்றேன்றார். அவங்க யாராவது ஒரு தடவையாவது நாங்க உலக கோப்பையை வெல்லுவோம்னோ, அல்லது அறையிருதிக்கு போவோம்னோ சொன்னாங்களா.
பட விமர்சனங்கள்
சமீபத்தில் பார்த்த படங்கள் ஒன்னு - Shooter ஆங்கிலப் படம், அடுத்தது - போக்கிரி தமிழ்ப் படம், அதற்கு அடுத்தது ஈ தமிழ்த் திரைப்படம்.
முதலில் Shooter
நல்ல மசாலாப் படம். லாஜிக்கை மூட்டை கட்டி வீட்டிலேயே போட்டுவிட்டு பார்க்க வேண்டிய படம். அடிதடி, வெட்டு குத்து எல்லாம் உண்டு, யார் எவ்வளவு சுட்டாலும், ஹீரோ மேல் படாது. பக்கத்தில் இருந்து ஒரு முறை ஒரு போலீஸ் சுட்டும் அவர் சின்ன குண்டு காயங்களோடு தப்பி விடுகிறார். ஹேலிகாப்டரில் இருந்து மிஷின் கன் மூலம் சுட்டாலும் இதே நிலைமைதான். அமெரிக்காவில் அனைவராலும் தேடப் படும் ஒரு குற்றவாளியாக, கவலை இல்லாமல் அவர் பாட்டுக்கு காரில் கண்ட இடங்களுக்குப் போய் வருகிறார், ஆனால் போலீஸ், FBI எல்லோரும் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். கடைசியில் அவர் என்ன ஆகிறார் என்பதுதான் கதை.
போக்கிரி - தமிழ்த் திரைப்படம்
பரதேசி இந்தத் திரைப்படத்தை ரொம்ப சிலாகித்து எழுதியிருக்கிறார் அதனால் அவரை அப்பரம் தனியா விசாரிச்சுக்கறேன். விஜய் படத்தில் லாஜிக் எதிர்பார்த்தால் தப்புதான், ஆனால், அதுக்காக இப்படி மக்களை நோகடிக்க வேண்டாம். அது எப்படியா எல்லா ஹீரோயின்களும் அடிதடி பண்ற, வெத்து ஹீரோவை லவ் பண்றாங்க. கடைசி சீன்ல அவர் போலீஸ் ஆஃபீசர்-ன்னு சொன்னா எல்லாரும் நம்பராங்க. ஒரு போலீஸ் ஆஃபீசர் ரொம்ப மோசமாம், ஆனால் அவரை கடைசீ காட்சி வரை ஒன்னும் செய்யாம விட்டுடுவாராம். அட போங்கப்பா இதுக்கு ஆங்கிலப் படம் Departed எவ்வளவோ மேல்.
ஈ தமிழ்த் திரைப்படம்


இதற்கும் Extreme Mesures(EM) ஆங்கிலப் படத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
1. ஈ-தமிழ்ப் படம் - EM ஆங்கிலப் படம்
2. ஈ-யின் ஹீரோ ஒரு ப்ளாட்பாரம் கேஸ் - EM - ஹீரோ ஒரு டாக்டர்
3. ஈ-யின் ஹீரோயின் க்ளப் டான்ஸர் - EM - ஹீரோயின் ஒரு நர்ஸ்.
4. ஈ-யில் பாட்டு உண்டு - EM -ல் அது கிடையாது.
5. ஈ-யில் காமெடி உண்டு - EM -ல் அது கிடையாது.
6. ஈ-யில் எல்லோரும் கத்தி பேசுகிறார்கள் - EM-ல் அது கிடையாது.
தமிழ் படத்தில் ஒரே ஒரு ஆறுதல் - இயக்குனர் இது ஆங்கிலப் படத்தின் ஈயடிச்சான் காப்பி என்பதைக் காட்ட 'ஈ'ன்னே பேர் வெச்சுட்டார்.
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

3 comments:

said...

வெட்டிப்பயல இந்த கிழி கிழிச்சிருக்கிய.. அவருகிட்ட சொன்னியளா??

said...

ஐயா பித்தப்பெருமானே!
"போக்கிரி" படத்தை விமர்சனம் செய்த என்னை விட்டுவிட்டு பாவம் நாகு அவர்களை விசாரித்து கவனிக்கிறேன் என்று எழுதியிருக்கிறீரே உம்மை ப்ளாகில்லா காட்டுக்கு தான் மாற்ற வேண்டும். சமீப காலத்தில் வெளி வந்த பல தமிழ் திரைப்படங்களில் (வந்தது முக்கால் வாசி சண்டை, குத்து, வெட்டு நிறைந்தவை தான்) சிறிது வித்தியாசமாக இருந்தது. அதனால் தான் சிறிது புகழ்ந்துவிட்டேன். ஆனாலும் நான் குறிப்பிட்ட சில கட்டங்களும் வசனங்களும் வித்தியாசமானவை தான்.

said...

ஜி

பின்னூட்டத்திற்கு நன்றி,

அவர் கிட்ட சொல்லிட்டு எழுதவில்லை, எழுதிட்டு சொல்லிட்டேன்.

பரதேசி, மன்னிச்சுக்கப்பா, இப்ப மாத்திட்டேன்.
Slope of the tinge . "பேசும்போது வந்தா பரவாயில்லை, எழுதும்போது எப்டியா-ந்னு கேட்டு கொடையாதீங்க"

பித்தன்.